Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Kogilavani / 2012 ஜூலை 08 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாஐச ஜெயபாலன் கவிஞன் Sunday, 08 July 2012 12:17 PM
பகுதி1
அரசை தோற்க்கடிக்க சம்பந்தருக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன.
. 1 முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவது 2 UNP யோடு இணைந்து போட்டியிடுவது.
2007ம் ஆண்டு மதிப்பீடுகளின்படி கிழக்கில் குடி அமைப்பு தமிழர் 40.39% முஸ்லிம் 37.64% சிங்களவர் 21.64% என அமைந்துள்ளது.
37 அங்கத்தவர் கொண்ட மாகாணசபையில் தனித்து போட்டியிட்டு தமிழ் கூட்டமைப்போ முஸ்லிம்காங்கிரசோ தலைக்கு 10 ஆசனங்களுக்கு மேல் பெறும் வாய்ப்பில்லை. கிழக்கில் சிங்கள வாக்கும் கணிசமான தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் பெறும் வகையில் ஆழும் UPA வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம்.
கிழக்கு மக்கள் உரிமைக்காக தமிழர் கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள். ஆனால் மாகாணசபைத்தேர்தல் தமிழ் முதல் அமைச்ரா முஸ்லிம் முதலமைச்சரா என்கிற கேள்விதான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முன்னுள்ள பெரிய கேள்வியாகும். இதன் ஆதாயம் சிங்கள முஸ்லிம் வாக்குகளையும் பெறக்கூடியதாக ஆளும் கூட்டணியில் போட்டி போடும் TMVP அமைப்புக்கே அதிகம் கிட்டும்.
Reply : 0 0
வாஐச ஜெயபாலன் கவிஞன் Sunday, 08 July 2012 12:18 PM
பகுதி 2
கிழக்குமாகாண வரலாற்றில் என்றாவது ஒருநாள் சுழற்ச்சி முறையில் முதலமைச்சர் அமைச்சர் பதவிகளைப் பகிரும் ஏற்பாட்டுடன் தமிழ் முஸ்லிம் தேசியக் கட்ச்சிகள் இணைந்து போட்டி யிடும் நிலையே ஏற்படும். அதற்கான தமிழ் முஸ்லிம் கூட்டணியும் பொது சின்னமும் உருவாகும். இம்முறையே அந்த நிலை ஏற்பட்டால் நல்லது. அல்லது TNA, SLMC தனித் தனியே போட்டியிட்டு தேர்தல் முடிய கூட்டாக ஆட்சி அமைக்கும் முடிவுக்கு வரலாம். ஆனாலும் இந்த முறையில் வெற்றிவாய்ப்பு குறைவே...தனித்துப் போட்டியிட்டு இருதரப்பும் சேர்ந்து 19 ஆசனங்கலைலைக் கைப்பற்றுவது இலகுவல்ல.
முஸ்லிம் காங்கிரசுடன் உடன்படிக்கை வராவிட்டால் தமிழர் கூட்டணி ஏறக்குறைய 7 ஆசனங்களைப் பெறக்கூடும். TNA படுதோல்வி தமிழர தரப்பை பலகீனப்படுத்தும். தோல்வி அடைவதைவிட வடக்கு தேர்தலையும் சேர்த்து வை என்கிற கோரிக்கையோடு தமிழர் கூட்டமைப்பு தேர்தலைப் பகிஸ்கரிக்கலாம்.
Reply : 0 0
ashar Sunday, 08 July 2012 01:37 PM
நல்லிணக்கம் வார்த்தையில் இருக்க முடியாது. செயலில் இருக்க வேண்டும்.
Reply : 0 0
meenavan Sunday, 08 July 2012 03:52 PM
முஸ்லிம் தலைமைகள் எல்லாமே முஸ்லிம் முதலமைச்சர் கோசத்தை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்ய உள்ள நிலைமையில், முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவை பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ்-தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் உடன்பாடு நிச்சயம் அரசாங்கத்துக்கு தோல்வியை ஏற்படுத்தும் மறுக்க முடியாத நிஜம். முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுகொடுப்பதில் எந்த அளவு நெகிழ்வு தன்மையினை கூட்டமைப்பினர் மேற்கொள்வர்? சுழற்சி முறையிலன்றி முஸ்லிம் தரப்பு முழுமையாகவே முதலமைச்சர் பதவியை பெற விரும்பும். இதற்கு பகரமாக மத்திய அரசின் அமைச்சு பதவிகளை இழந்து மு.கா.வுக்கு அரசில் இருந்து வெளியேறும் நிலைமையும் ஏற்படலாம், முடிவாக கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு தாரைவார்ப்பு .....? அரசின் அமைச்சு பதவிகளை இழப்பதற்கு மு.கா. முழுமனதுடன் செயல்படுமா? என்பது கேள்விக்குரியதே?
Reply : 0 0
Rahmath ali Monday, 09 July 2012 04:32 AM
இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட கூட்டணி அரசாங்கங்களில் மகிந்த ராஜபக்ஷவினது கூட்டணியே மிகக் கூடியளவு கட்சிகளைக் கொண்டது. அதில் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சியுமே திருப்தியுடன் இல்லை. ஆனால் ஏதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே அதில் இணைந்துள்ளன. அக்கட்சியிலுள்ளவர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கின்றனர். அடிக்கடி அரசாங்கத்துக்கு தலையிடியும் கொடுத்து வருகின்றனர். நிலைமை இப்படியிருக்க அரசாங்கத்தைத் தோற்கடிக்கத்தான் நீங்கள் உங்கள் சக்திகளையெல்லாம் வீணாக்கி மக்களையும் வழிகெடுத்து உங்களுக்குள் கூட்டணிகளை அமைத்துக்கொள்வதில் பயனேதும் விளையப் போவதில்லை. மாறாக மக்கள் மேலும்மேலும் குழப்பமடைவார்கள். பிரிவினையும் பகைமையும் மேலும் வலுப்பெறும். இன்றைய நிலையில் இவையெல்லாம் தேவைதானா?
Reply : 0 0
abdula Monday, 09 July 2012 06:40 AM
அன்று முஸ்லீம் கட்சி என்று மு.கா. மட்டும்தான் இருந்தது அதனில் இருந்து இரண்டு முஸ்லீம்களைக் காட்டிக்கொடுத்து பிரிந்தனர். அதில் ஒன்று தற்போது தேரராக மாறிவிட்டது. மூன்றாக எழுதுவதை நிறுத்திவிட்டு இரண்டு என்றுமட்டும் எழுதுங்கள்.
Reply : 0 0
வாஐச ஜெயபாலன் கவிஞன் Monday, 09 July 2012 02:50 PM
இன்றுள்ள நிலைமையில் தமிழர் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியுடன் உடன்படிக்கைக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். சுழற்சி முறை முதலமைச்சர் முதல் சுற்று யார் என்பதை லொத்தர் முறையில் தெரிவு செய்தல் என்னும் அடிப்படையில் ஒப்பந்தம் அமையலாம். தேர்தல் சின்ன பிரச்சனைக்கு மட்டக்களப்பில் தமிழர் கூட்டமைப்புச் சின்னம் அம்பாறையில் முக சின்னம் திருகோணமலையில் நவசமசமாஜிக் கட்சிபோன்ற ஒரு ஏற்றுக்கொள்ளத்தக்க சிறுகட்சியின் சின்னம் என்கிற அடிப்படையில் தீர்வு காண முடியும்.
ஆனால், அத்தகைய கூட்டணி அமையும் வாய்ப்பு இன்னும் பிரகாசமாக இல்லை. நிலைமை இப்படியே தொடர்ந்தால் மு.க ஐ.தே.க.வில் போட்டியிடும் நிபந்தம் ஏற்படலாம். மு.க. ஐ.தே.க. கூட்டணி 15 ஆசனங்களுக்கு அதிகமாக வெற்றிபெறும் வாய்ப்பில்லை. மு.க. தனித்துப் போட்டியிட்டாலன்றி தேர்தல் முடிய கூட்டமைப்பின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது.
இன்றைய நிலமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அங்கம் வகிக்கும் ஆளும் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்புகள் மட்டுமே பிரகாசமாக உள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago