2025 ஜூன் 28, சனிக்கிழமை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை திருகோணமலையில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் சனிக்கிழமை கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை திருகோணமலை நகரில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை நடத்தவிருக்கின்றது.
 
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை அறிமுகம் செய்கின்ற கூட்டமாகவும் இது அமையும். திருகோணமலை சிவன் வீதியில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியின் அருகில் முதலாவது பிரசாரக்கூட்டம் நடைபெறும்.

மறுநாள் (29.07.2012) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் வடக்கு பகுதியில் உள்ள கட்டுக்குளம்பற்று கிழக்கு பிரதேசத்தில் நிலாவெளி, கல்லம்பத்தை, திரியாய், குச்சவெளி ஆகிய கிராமங்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

30.07.2012 திங்கட்கிழமை மூதூர் பிரதேசத்தில் ஈச்சிலம்பத்தை, கட்டைப்பறிச்சான், கிளிவெட்டி மற்றும் வெருகல் பிரதேசங்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடத்தப்படவிருக்கின்றன.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் முதலாவது அறிமுகப் பிரசாரக்கூட்டத்தில் பங்குபற்றுவர் என்று திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்றப் பிரதிநிதியும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத்தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .