2025 ஜூன் 28, சனிக்கிழமை

மூதூர் தளவைத்தியசாலை ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


திருகோணமலை, மூதூர் தளவைத்தியசாலையைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு மணித்தியால அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நோன்புப் பெருநாள் முற்பணம் மற்றும்  மேலதிக நேரக் கொடுப்பனவை உடனடியாக  வழங்குமாறு கோரியே இவர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இன்றையதினம் மாலைக்குள் தமது கோரிக்கை நிறைவேற்றப்படாதுவிடின், நாளையதினமும் வேலைநிறுதத்தில் ஈடுபடப்போவதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் வைத்தியசாலையின் மருத்துவர்கள், துணை மருத்துவசேவை உத்தியோகத்தர்கள், தாதிமார்கள், சிற்றூழியர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.



You May Also Like

  Comments - 0

  • rizad Wednesday, 15 August 2012 03:00 AM

    அவர்களுடைய விடயத்தில் யானை மரம் வெத்திலை எல்லாம் என்ன சொல்லுது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .