2025 ஜூன் 28, சனிக்கிழமை

நியமனங்களை வழங்கும்போது முஸ்லிம் காங்கிரஸார் அனுப்பும் கடிதங்களை குப்பையில் போடுவோம்: அமைச்சர் சரத்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                          (எம்.பரீத்)


நியமனங்களை வழங்கும்போதும் அபிவிருத்தித் திட்டங்களைச் செய்யும்போதும் எங்கள் சகோதரரின் நஜீப் அப்துல் மஜீதின் கடிதத்தைப் பார்ப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் அனுப்புகின்ற கடிதங்களை நாங்கள்  கசக்கி குப்பைத் தொட்டியிலே போடுவோம். ஆகவே கடிதங்களை கூப்பைத் தொட்டியிலே போட வேண்டும் என்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்குகளை அளியுங்கள் என சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

கிண்ணியா புஹாரியடிச் சந்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை   நேற்று புதன்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டபோதே  அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

'ரணில் வென்றாலும் மரம் வென்றாலும் சரி எங்கள் ஜனாதிபதியை மாற்றமுடியாது. நாடாளுமன்றத்தையும் மாற்றமுடியாது. இது எங்கள் சுதந்திரக் கட்சியின் பக்கம் இருக்கின்றது. இங்குள்ள நகரசபை, பிரதேசசபை சுதந்திரக் கட்சியின் பக்கம் இருக்கின்றது. இன்று சுதந்திரக் கட்சிதான் பலமிக்க கட்சி ஆகும்.

பாடசாலையோ, வீதி அபிவிருத்தியோ, மின்சார வசதியோ மற்றும் ஏனைய அபிவிருத்திகளையோ செய்து கொடுக்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியினாலோ அல்லது மரத்தினால் வெல்லுகின்ற எம்.பி.க்களினாலோ ஒன்றும் சாதிக்கமுடியாது.  ரவூப் ஹக்கீமுக்கு எல்லா அதிகாரமும் இல்லை. எங்கள் சுதந்திரக் கட்சியிடமே உள்ளது.

அரசாங்கத்தை மாற்ற முடியாது என்று விளங்கிக்கொண்டால் அதுபோன்று ஏனையோர்களினால் எதையும் சாதிக்கமுடியாது என்றும் விளங்கிக்கொண்டால் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து வெற்றியின் பங்காளியாக வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களும் இன்று அவர்களை விட்டு  ஓடிவந்து எங்கள் சுதந்திரக் கட்சியில் இணைகின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இரண்டு பக்கங்களிலும் நடனம் ஆடுகின்றனர். காலையில் கூறியதை மாலையில் கூறமாட்டார்கள். அப்;படிச் சொல்லும் ரவூப் ஹக்கீமை ஒருபோதும் நம்புவது இல்லை.

கடந்த மாதம் இந்தப் பகுதியில் 340 பேருக்கு அரசாங்கத்தினால் நாம் நியமனங்களை வழங்கினோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஒருவருக்குக் கூட நியமனங்கள் வழங்க முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்..

நியமனங்களை வழங்கும்போதும். அபிவிருத்தித் திட்டங்களைச் செய்யும்போதும் எங்கள் சகோதரரின் நஜீப் அப்துல் மஜீதின் கடிதத்தைப் பார்ப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் அனுப்புகின்ற கடிதங்கள் நாங்கள் அதை கசக்கி  குப்பைத் தொட்டியிலே போடுவோம். ஆகவே கடிதங்களை கூப்பைத் தொட்டியிலே போட வேண்டும் என்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குப் வாக்குகளை அளியுங்கள்.

உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் பள்ளிவாசல்களை கட்ட பணம் வேண்டும் என்றால், உங்கள் குழந்தைகளுக்கு நியமனம் வழங்க வேண்டும் என்றால் அவ்வாறாயின் நீங்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்குகளை அளியுங்கள். ஏனெனில்  அதற்குத்தான் பலம் இருக்கின்றது.

எதிர்வரும் 9ஆம் திகதி தேர்தல் வெற்றியைக் கண்டு யானை காட்டுக்குப் போய்விடும். இன்று ரணில் விக்கிரமசிங்கவின் சேவையைக் கண்டு யானை சிறியதாக போய்விட்டது. அன்று 40 இலட்சமாக இருந்த  யானை இன்று 20 இலட்சமாக குறைந்து விட்டது..

ரணில்  விக்கிரமசிங்கவிற்கு இன்று அவர் கடைசியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று கூடத் தெரியாது இருக்கின்றார். அவர் இங்கு வந்திருக்கின்றாரா?  உங்கள் வீடுகளுக்கு வந்திருக்கின்றாரா? அவர் நாட்டிலேதான் இருக்கின்றாரா? ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பலர் விலகிச் சென்றுள்ளனர். இனி இந்தக் கட்சியால் அந்த ஒரு பலத்தை இனி ஒருபோதும் பெற்றுக்கொள்ளமுடியாது' என்றார்.

முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின்  திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான நஜீப் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த கிளைத் திறப்பு விழாவில் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தைப் அமைச்சரிடம் பெற்றுக்கொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • RM Thursday, 23 August 2012 07:50 AM

    அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்......

    Reply : 0       0

    ML Gafoor Thursday, 23 August 2012 09:06 AM

    அதிகாரம் இருக்கு பலமிருக்கு என்று மனம்போன போக்கில கையை வாயைக் காட்டுபவா்கள் தங்களது சகபாடிகளுக்கு ஏற்படுகின்றவைகளிலிருந்து படிப்பினை பெறட்டும். சிரேஷ்ட அமைச்சரிடமிருந்து ஜனநாயத்திற்கு புறம்பான வசனம் வெளியாகின்றது என்றால் நிலைமை பரிதாபமானதாகத்தான் இருக்கும் ?

    Reply : 0       0

    Kanavaan Thursday, 23 August 2012 09:30 AM

    அமைச்சரே, பள்ளி கட்ட உங்களிடம் நாங்கள் பணம் கேட்கவில்லை. நீங்கள் எங்களது பள்ளிவாசல்களை உடைக்காமல் விட்டாலே போதும். ஐயா உங்கள் பேச்சு படித்த ஒருவரின் பேச்சுப்போல் தோன்றவில்லையே. இப்படியெல்லாம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அபிவிருத்தி அரசின் கடமை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

    Reply : 0       0

    imran Thursday, 23 August 2012 10:55 AM

    இந்த அரசாங்கத்தில் இருக்கும் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் இப்படி சொல்கிறார் என்றால் இந்த அரசாங்கத்தை பற்றி என்ன சொல்ல வேண்டும். இந்த அரசாங்கம் துவேசத்தை உச்சத்துக்கு கொண்டு போய் உள்ளது. இப்படி பொறுப்பு இல்லாத அமைச்சர்கள் இருக்கும் அரசாங்கத்தை எப்படி ஆதரிப்பது? முஸ்லிம் காங்கிரஸ் ஐ ஆதரித்தால் இந்த நாட்டில் வாழ முடியாதோ? அடிப்படை சுதந்திரமும் இல்லையோ? ஆகவே நாம் கவனமாக சிந்தித்து எமது வாக்குகளை பிரயோகிக்க வேண்டும்.

    Reply : 0       0

    shan Thursday, 23 August 2012 11:15 AM

    அவர்கள் அவர்களின் சுயரூபத்தை பேச்சிலே காட்டி இருக்காருங்கோ இனி நீங்கள் என்ன செய்றதுங்கோ முடிவு என்னாதுங்கோ?

    Reply : 0       0

    irakkakandyan Thursday, 23 August 2012 11:28 AM

    என்ன அரசாங்கம் உங்கள் பாட்டன் சொத்தா .. நீங்கள் நினைத்த மாதிரி செய்வதற்கு. மக்கள் மத்தியில் பேசும் போது வாயை அடக்கி பேச வேண்டும். மிரட்டும் தொனியில் பேசுவதை நிறுத்த வேண்டும். உங்களை போன்றவர்களை பார்க்கும் பொது இந்த அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமை நன்றாகவே புரியுது....

    Reply : 0       0

    vihaden Thursday, 23 August 2012 11:35 AM

    ஹொன் மினிச்டர் இது உங்க ஊட்டுப் பனமில்ல. மக்களின் வருமான வரிப்பணம்.

    Reply : 0       0

    Nafeer Thursday, 23 August 2012 11:55 AM

    இந்த அரசில் இன்னும் ஸ்ரீ.ல.மு.கா இணைந்திருக்க வேண்டுமா?

    Reply : 0       0

    ACM Thursday, 23 August 2012 02:15 PM

    யாரு எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று விவஷ்தையில்லாத காலமிது !!! பாருங்கோ சிரேஷ்ட அமைச்சா்மார்களுக்கே அதிக மாரியாதையும் மதிப்பும் கொடுக்கப்படுகின்ற விடயம் அன்றாடம் எமது ஊடங்கள் எமக்கு தருகின்றனதானே?

    Reply : 0       0

    mohammed Thursday, 23 August 2012 02:36 PM

    அமைச்சரே, பள்ளி கட்ட உங்களிடம் நாங்கள் பணம் கேட்கவில்லை. எங்களது பள்ளிவாசல்களை உடைக்காமல் விட்டாலே போதும். ஐயா உங்கள் பேச்சு படித்த ஒருவரின் பேச்சுப்போல் தோன்றவில்லையே. இப்படியெல்லாம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அபிவிருத்தி அரசின் கடமை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

    Reply : 0       0

    jesmin Thursday, 23 August 2012 04:45 PM

    அமைச்சரே நீங்களும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவித்துவிட்டு, கட்சியை நாசமக்கிவிட்டுத்தானே இந்த அரசாங்கத்துடன் இணைந்துள்ளீர்கள்.

    Reply : 0       0

    JMH Thursday, 23 August 2012 05:12 PM

    சரியான அமைச்சர் இவர்தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் அரசாங்கத்தின் கொள்கை.

    Reply : 0       0

    இர்பா Thursday, 23 August 2012 06:26 PM

    அமைச்சர் சொல்வது அதிகார திமிரைக்கட்டுகிறது. இவர்கள் மக்களுக்கு சேவை செய்பவர்கள் அல்ல என்பது மட்டும் புரிகின்றது. வாக்குக்காக சேவை செய்கின்றார்கள். அமைச்சேர அதிகார திமிர் வேண்டாம்.

    Reply : 0       0

    S.Sinasudeen Friday, 24 August 2012 05:07 AM

    இந்த அரசாங்கத்தில் இருக்கும் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் இப்படி சொல்கிறார் என்றால் இந்த அரசாங்கத்தை பற்றி என்ன சொல்ல வேண்டும். இந்த அரசாங்கம் துவேசத்தை உச்சத்துக்கு கொண்டு போய் உள்ளது. இப்படி பொறுப்பு இல்லாத அமைச்சர்கள் இருக்கும் அரசாங்கத்தை எப்படி ஆதரிப்பது? முஸ்லிம் காங்கிரஸ் ஐ ஆதரித்தால் இந்த நாட்டில் வாழ முடியாதோ? அடிப்படை சுதந்திரமும் இல்லையோ? ஆகவே நாம் கவனமாக சிந்தித்து எமது வாக்குகளை பிரயோகிக்க வேண்டும். என்ன அரசாங்கம் உங்கள் பாட்டன் சொத்தா.. நீங்கள் நினைத்த மாதிரி செய்வதற்கு. மக்கள் மத்தியில் பேசும் போது வாயை அடக்கி பேச வேண்டும். மிரட்டும் தொனியில் பேசுவதை நிறுத்த வேண்டும். உங்களை போன்றவர்களை பார்க்கும் போது இந்த அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமை நன்றாகவே புரியுது... அமைச்சர் சொல்வது அதிகார திமிரைக்கட்டுகிறது. இவர்கள் மக்களுக்கு சேவை செய்பவர்கள் அல்ல என்பது மட்டும் புரிகின்றது. வாக்குக்காக சேவை செய்கின்றார்கள். அமைச்சரே அதிகார திமிர் வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .