2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசல்களுக்கு எத்தகைய இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்: அதாவுல்லா

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

'இலங்கையில் பள்ளிவாசல் எதற்கும் எத்தகைய இடையூறும் ஏற்படக் கூடாது என்று உறுதியாக விரும்பும் ஒரு தலைவர்தான் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதனாலேதான் அவர் தனது ஆட்சிக் காலத்தில் பள்ளிவாசல் ஒன்று உடைக்கப்பட்டது என்ற அவப்பெயர் தனக்கு வரக்கூடாது என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்' என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்;சி, மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.ஏல்.எம்அதாவுல்லா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூதூர் அல்ஹிலால் சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஜெனிவா பிரேரணையின் போது முஸ்லிம்கள் பள்ளிவாசல்களின் முன்னால் நின்று அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதனை சகித்துக்கொள்ள முடியாத வெளிநாட்டு சக்திகளே பள்ளிவல்களுக்கு இடையூறாக செயற்படுகின்றன.
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கு மிகக்கூடுதலாக சேவையாற்றியிருக்கும் ஒரு தலைவரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. முஸ்லிம்களால் மறக்கமுடியாத தலைவரும் இவரேயாவார். இதனால் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.

கட்சி என்பது 'குர்ஆன் ஆயத்து' அல்ல. கட்சி என்பது காலத்தின் தேவை. அது மக்களின் தேவை. தலைவர் அஷ;ரப் இன்று இருந்திருந்தால் நுஆ என்ற கட்சிதான் இப்போது இருந்திருக்கும். எனவேதான் தேசிய காங்கிரஸை நான் உருவாக்கினேன். எனக்கு தலைவர் அஷ;ரபின் ஆசிர்வாதமும் இருக்கின்றது.

இந்த அதாவுல்லாவுக்கு அரசியல் இதுவரை எந்த தோல்வியையும் தரவில்லை. இந்த முறை மூன்று மாவட்டங்களையும் வெற்றிகொண்டு மாகாண சபையின் ஆட்சியையும் கைப்பற்றுவோம்' என்றார்.

ஏ.எஸ்.அப்துல்லா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வேட்பாளர்களான எஸ்.எம்.நவாஸ், எச்.எம்.எம்.பாயிஸ்  ஆகியோரும் உரையாற்றினர்.

You May Also Like

  Comments - 0

  • Hayley Saturday, 25 August 2012 07:21 PM

    மூளைக்கும் வாய்க்கும் மனசாட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் பேசி மக்களை ஏமாற்றும் புத்தி இருகும் வரைக்கும் பிழைப்புக்கு பஞ்சம் இல்லை.

    Reply : 0       0

    Bishrullah Sunday, 26 August 2012 08:11 PM

    //கட்சி என்பது 'குர்ஆன் ஆயத்து' அல்ல. கட்சி என்பது காலத்தின் தேவை. // இவர் என்ன சொல்ல வாறார்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Sunday, 26 August 2012 03:39 PM

    நெருபென்டா சுட்டுடுமா என்ன??? தென் இலங்கை முஸ்லிம்கள் ஏன் தாங்கள் ஒற்றுமைபட்டு அரசியல் அதிகாரம் உள்ள பிரதிநிதிகளை தங்களுகென உருவாக்கி, தங்கள் பிரச்சினைகளை பேசும் திறானி உள்ள மக்கள் பிரதி நிதிகளை உருவாக்க கூடாது??? கிழக்கு முஸ்லிம்களின் ஒற்றுமைபற்றி பேசும் தெனிலங்கை முஸ்லிம் சமூகம் தங்களின் ஒற்றுமை பற்றி சிந்திப்பதெப்போது??? தங்களின் பிரச்சினைகளை உரிய இடம் பேசுவதெப்போது???

    Reply : 0       0

    MohamedAkp Sunday, 26 August 2012 01:03 PM

    இவர் ஒரு கபினெட் மினிஸ்டர் என்றால் அதைப்பற்றி ஜனாதிபதிஉடன் பேசி அந்த சக்தியை தடுக்கலயா? இடையூறுகள் பள்ளிகளுக்கு வராமல் ஜனாதிபதி பார்த்துகொள்வாராம். அப்பொஇ தெஹிவல பள்ளியை மூடியதுஇ ராஜகிரிய பள்ளி தேர்வுகானப்பட இருக்கிரறதுஇ தம்புள்ளை அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது... இவைகளின் முடிவை தேர்தலுக்கு முன் சொல்லுவார்களா? முஸ்லீம்களுக்கு அதிக சேவை ஆற்றிய தலைவருக்கு நன்றிசெலுத்த வேண்டுமாம். இஸ்ரவேலை கொண்டுவந்ததற்கா? கொம்பனிதெருவில் முஸ்லீம்களை அகற்றியதற்கா? இன்னும் அதனி செஇய்ய இருப்பத்ற்கா? நுரைச்சோலை வீட்டை கொடுக்காமல் தடுத்தத‌ற்கா? பொத்துவில், தீகவாப்பி, அஸ்ரப் நகர் காணிகளை அபகரித்ததற்கா? இவர்கள் தான் எமக்கு கொடுமைல் செய்தவர்கள். வாக்கு இல்லை.

    Reply : 0       0

    muza Sunday, 26 August 2012 08:47 AM

    எதையும் பேசலாம் ஆனால் அல்லாஹ் பாத்ர்துக்கொன்டு இருக்கின்றான்.

    Reply : 0       0

    Abal khair Sunday, 26 August 2012 04:35 AM

    இவர் அதாவுல்லாஹ் அல்ல அதாபுல்லாஹ் (அல்லாஹ்வின் வேதனை) முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் கொடுத்துள்ள வேதனை, இந்த வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுவது நமது கடமை.

    Reply : 0       0

    shan Saturday, 25 August 2012 09:29 PM

    சார் அந்த வெளிநாட்டு சக்தி செய்ரத நீன்க பார்தீன்க? பள்ளிகலை மாத் திரம் தாக்குது? அப்ப நீன்க ஏன் சார் மினிஸ்டரா இருந்தும் உன்க முஸ்லிம்கலுக்காக் ஒருகுரல் கொடுக்க இல்ல? உங்கள் வெளிநாட்டுல‌ மந்திரி பதவி போயுடுமா? யார் காதில பூ சுத்துறீங்க????? நாம எல்லாம் முழுச்சிக்கிட்டோமுங்க?????

    Reply : 0       0

    manithan Saturday, 25 August 2012 08:34 PM

    சரியாக சொன்னீர்கள் கபூர்.... இவரைப் போன்றவர்களுக்கு சரியான பதில் எல்ளோரும் ஒன்று சேர்ந்து மரத்துக்கு வாக்களிப்பதுதான்.

    Reply : 0       0

    Ahamed Saturday, 25 August 2012 07:21 PM

    சில விடயங்களை நுணுக்கமாகத்தான் பேசி முடிவு எடுக்கனும்...
    ரவுப் ஹக்கிம் மாதிரி வார்தைகள யோசிக்காமல் கூறி விட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பது ஒரு தலைவனுக்கு அழகு இல்லை.

    Reply : 0       0

    ML Gafoor Saturday, 25 August 2012 12:24 PM

    அரசாங்கம் உங்கள் பக்கம் ஒத்துக் கொள்கின்றோம். ஆட்சியாளரும் நீங்கள்தான் என்றும் ஒத்துக் கொள்கின்றோம். நீங்கள் சொன்னபடி ஜனாதிபதியும் உள்ளார் என்றும் ஒத்துக் கொள்வோம். மேலும் நீங்கள் சொல்கின்றவாறு வெளிநாட்டுக் காரா்கள்கரும் உள்நாட்டுக் காரா்களும் சோ்ந்துதான் பள்ளிவாயல்களுக்கு சேதம் செய்கின்றார்கள் அதனையும் ஒத்துக் கொள்கின்றோம். அப்படி என்றால் சேதம் உண்டுபண்ணும் அத்தகையவா்களில் ஒருத்தரையாவது உங்களால் அல்லது உங்களது அரசாங்கத்தால் அல்லது உங்களது ஜனாதிபதியால் சட்டத்தின் முன் கொண்டுவரமுடிந்ததா ? இல்லையே அப்படி என்றால் உங்களது ஆட்சி எதற்கு ??? சும்மா அப்பாவி பொதுமக்களை ஏமாளிகளாக்கி வயிறு பிழைக்காம பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துங்க ஐயா. அது மேலாக இருக்கும்.

    Reply : 0       0

    jaufer Saturday, 25 August 2012 04:46 PM

    முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கும்போதெல்லாம் அரசாங்கத்துக்கு கூஜா தூக்குவதற்கு உங்களவிட திறமையான ஆள் இல்ல.

    Reply : 0       0

    லங்கன் Saturday, 25 August 2012 03:45 PM

    ஆமாம், பிச்சை எடுப்பதுதான் மேல். அதைத்தானே இப்போதும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    Reply : 0       0

    Kanavaan Saturday, 25 August 2012 02:51 PM

    அவர விடுங்க ஐயா, அவர் அப்படித்தான்.

    Reply : 0       0

    Mohamed Saturday, 25 August 2012 01:34 PM

    உங்களை பாராளுமன்ற உறுப்பினரக்கி மந்திரி பதவியும் தந்து வைத்து இருப்பதற்கு நீங்கல்தான் நன்றிக் கடமைப்பட்டவர்.

    Reply : 0       0

    Mohamed Abdulla Saturday, 25 August 2012 01:15 PM

    நடக்க வேண்டியதெல்லாம் நடந்து முடிந்து. உடைக்க வென்டியதெல்லாம் உடைய்த்த பின் அதாவுல்லா இப்படி கதைக்கிராரா?
    தம்புள்ளையில் உடைத்தது என்ன?
    தெஹிவலயில முடியது? ராஜகிரியில முடியது?
    எங்கட சமூகம் விழித்திருக்கிறது. மினிஸ்டர் தூங்குகிரார்!

    Reply : 0       0

    Riyas Saturday, 25 August 2012 12:53 PM

    நாட்டில் நடப்பவற்றைப் பார்கின்றகின்றபோது மரமட்டை கூட இவ்வாறு பேசாதய்யா.

    Reply : 0       0

    munaiyooran Saturday, 25 August 2012 12:35 PM

    ஹி ஹி ஹி.... அப்போ இதுவரை நடந்ததல்லாம் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X