2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிழக்கு மாகாணம் தமிழருக்கா சிங்களவர்களுக்கா முஸ்லிம்களுக்கா என்ற தேர்தலே இது: ஹசன் மெலவி

Super User   / 2012 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)

கிழக்கு மாகாணம் தமிழருக்கா, சிங்களவர்களுக்கா முஸ்லிம்களுக்கா என்ற தேர்தலே கிழக்கு மாகாண சபை   தேர்தல் என திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் எஸ்.எல்எம். ஹஸன் மௌலவி கூறினார்.

கிண்ணியா பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் எதிர்வரும் 8 ஆம் திகதியோடு விடுதலை கிடைக்கப் போகின்றது. எங்களை அடக்கி விடுவோம் என்று பகல் கனவு காணாதீர்கள். ஆயிரம் பேரை வீரர்கள் 313 பேர், ஓட ஓட விரட்டியடித்த ஒரு பரம்பரை பத்ர் யுத்தத்தில், பாரசீக படை வீரர்கள் 3000 படை வீரர்கள் ரோமப் படையிலிருந்த 3 இலட்சம் பேரை விரட்டியடித்த பரம்பரை.

தம்புள்ளை பள்ளிவாசலை வேறு இடத்தில் கட்டுமாறு அதனை கட்டுவதற்கு பணம் தருவதாக சொல்கின்றனர். யாருக்கு யார் பணம் தருவது என்று நான் கேட்கின்றேன். கிண்ணியா பாலம் கட்டியதற்கு நாங்கள் வசூல் கொடுத்தோம். சவூதி அரேபிய கப்பல் துறை பாலம் கட்ட நாங்கள் கொடுத்தோம் வசூல். யாருக்கு யார் வசூல் கொடுப்பது?

இங்கே இருக்கின்ற சிலர் ராஜாவுக்கு குஜா துக்கின்ற ஜனாதிபதிக்கு முதுகு சொறிகின்ற அமைச்சர்களைக் கொண்டு போய் கட்டாரிலும், குவைத்திலும் சவூதி அரேபியாவிலும் வசூல் வாங்கி வருகின்றார் ஜனாதிபதி. அதை விட்டு அவர்கள் எங்களுக்கு வசூல் தரப் போகின்றார்களாம் பள்ளி கட்டுதற்கு.

எங்களுடைய புண்ணிய பூமியை மீட்பதற்கு நாங்கள் தியாகம் செய்ய தயாராக இருப்தாகவும் கோஷம் எழுப்பினார்கள். நான் சொன்னேன், எங்களுடை பள்ளிவாசல்கள் கௌபத்துல்லாவின் குழந்தைகள். பள்ளிவாசலை உடைப்பதென்றால் கௌபத்துல்லாவை உடைப்பதற்குச் சமன் இதனை மீடடெடுப்பதற்கு எங்களுடைய இளைஞர்கள் ஜிஹாத் செய்து மீட்டெடுப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்று.

புலிகளை அடக்கி விட்டோம் என்பதற்காக வேண்டி முஸ்லிம்களை அடக்குவோம் என்று கனவு காணாதீர்கள் என்றேன். இதெல்லாம் விட்டு விடுங்கள் நாங்கள் இனக்கத்தோடு வாழ்வோம் என்றேன்.

பள்ளிவாசலை உடைப்பதாக இருந்தாலும் பள்ளிவாசலைக் கட்ட பணம் தருவதாக இருந்தாலும் வெற்றிலைக்கும் 4 ஆம் இலக்கத்திற்கு போடுமாறு அமைச்சர் சொல்லுகின்றார். இது என்ன புதுக் கதையாக இருக்கின்றது?

அமைச்சராக இருந்தவர் நாடாளுமன்றத்தில் தோற்றுவிட்டு, இந்த மாகாண சபைத் தேர்தலில் தேர்தலில் போட்டிடுகின்றார். இதிலும் தோற்றால் பள்ளிவாசல் தலைவர் தேர்தலில்தான் போட்டியிட வேண்டும். ஏணி ஏறுவனுக்;குத்தான் கொடுக்க வேண்டும் ஆனால் தவழுகின்றவனுக்கு எதற்கு ஏணி.

இப்பொழுது  இருக்கின்ற சுற்று சூழல் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலுக்கெதிராக கட்டவிழப்பட்டிருக்கின்ற வன்செயல்கள் பயங்கரவாதம் புலி பயங்கரம் ஓய்ந்து விட்டது ஆனால் பேரினவாதப் பயங்கரம் என்று ஒரு பெரும் பயங்கரவாதம் பலப்படுத்தியிருக்கின்றது.

கருமலையூற்று பள்ளியை  பார்ப்பதற்கு சென்ற அமைச்சருக்கே பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. 1930 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் அதற்குப் பிறகு பத்திரிகையில் நஜீப் அப்துல் மஜீதும் அஸ்வரும் மணித்தியாலய கணக்கில் இருந்து இராணுவ அதிகாரிகளிடத்திலேயே எவ்வளவோ பேசி போனார்களாம் என்று இருந்தது. என்னடா இது பள்ளிவாசலுக்குப் போவதற்கு யாரிடமும் கேட்பதில்லை.

கிழக்கு மாகாணம் தமிழருக்கா, சிங்களவர்களுக்கா, முஸ்லிம்களுக்கா சொந்தம் என்ற தேர்தல் தான் இது.  ஜனாதிபதித் தேர்தல் அல்ல. தழிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்களிக்கின்றார்கள். சிங்களவர்கள் சிங்களவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள் என்ன கோதரியோ தெரியாது..  முஸ்லிம்கள் எல்லோருக்கும் வாக்களிக்கின்றார்கள்.

தேர்தல் என்ற கட்சி போர்வையில் இதைப் பேசவில்லை. ஒரு இஸ்லாமிய சமூகப் போர்வையில் இஸ்லாமிய உணர்வுடன் பேசுகின்றேன். தம்புள்ளை அநூராதபுரத்தில் தொடங்கி குருநாகலிலே, தெஹிவளையிலே ராஜகிரியவிலே தொடர்நது பள்ளிவாசலில் கைவக்கின்றார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியும் அதே மாதிரிதான் தோணியொன்று மாதிரி அந்தபுரம் இருந்து சஜீத் வழிக்கின்றார், இந்தப் பக்கமிருந்து ரணில் வழிக்கின்றார். தோணி எந்தப் பக்கம் போகும்? குறைந்தது ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களை மட்டுமே பெறும். அம்பறையிலும் இரண்டும் திருகோணமலையிலும் இரண்டும், ஆனால் ஒரு முஸ்லிம்கூட வருவதற்கான் சாத்தியமில்லை.

எல்லா மாகாண சபைகளிலும் முதலமைச்சருக்கு என்று ஒரு அதிகாரமிருக்கின்றது. ஆனால் கிழக்கு மாகாண சபையில் ஒன்றுமில்லை எல்லா அதிகாரமும் ஆளுநருக்குத்தான் இருக்கின்றது. ஆளுநர் என்று பார்க்கும் போது எமக்கும் ஒரு ஆளுநர் மேல் மாகாணத்தில் இருக்கின்றார். அலவி மௌலானா அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நானும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில்  நான்கு வருடங்கள் கிழக்கு மாகாண சபையில் இருந்தேன். அந்த நான்கு வருட கதையை சொல்லவே வெட்கமாக இருக்கின்றது.. எனக்கு மக்கள் ஆதரவு இருக்கறதென்று தெரிந்து கொண்ட பசில் ராஜபக்ஷ என்னை அழைத்தார். அங்கு போய் 12 தா பைல் தாள்களைக் காட்டி, ஒவ்வொரு விதமான  அபிவிருத்தி பைல் எல்லாம் காட்டி, இதெல்லாம் செய்வதற்கு உங்களைப் போல் ஒருவர் தேவையென்று சொன்னார். அதையும் நானும் நம்பி நானும் வென்றெடுத்து விட்டு அவரிடம் போய் கேட்டால் அந்த மனிதர் ஒரு நியமனம் கூட தரவில்லை.

அந்த நேரத்திலே செத்து கிடந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு முட்டுக் கொடுக்க நான் தேவைப்பட்டேன்.
எனக்கு சீட்டுக் கிடைக்கவில்லையென்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் கேட்பதாக சொல்லுகின்றனர். அப்படியில்லை.

இந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு என்னால் அடக்கி வாசிக்க முடியாது. முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் பள்ளிவாசலுக்கும் நடக்கின்ற அநியாயங்கள் அக்கிரமங்களைப் பாhத்துக் சகித்துக்கொண்டிருக்க முடியாது. இனி நான் வெளியே வரப் போகின்றேன். தயவு செய்து என்னை உள்ளே எடுங்கள் என்று  தலைவர் ரவூப் ஹக்கிமிடம் கேட்டபோது இணைங்கியிருந்தார். இக் கட்சிக்குள் உள்வாங்கமாலிருந்தால் நான் தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருப்பேன். சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியை இராஜினமா செய்துள்ளேன்.

நான் சொல்லுகின்றேன் ஏழு மாகாணங்கள் சிங்களவர்களுக்கு. வட மாகாணம் தமிழருக்கு. முஸ்லிம்களுக்கு 48 வீதம் இருக்கின்ற இந்த கிழக்கு மாகாணம் மட்டுமே எங்களடைய நிலை என்ன? ஆகவே சிந்தியுங்கள்" என்றார்.

மற்றொரு வேட்பாளரான ஏ.ஆர்.எம்.சைபுள்ள இந்நிகழ்வில் பேசுகையில்,

"அமைச்சர் அதாவுஉல்லா  பல் விழுந்த சிங்கம்தான். அவர் இப்பொழுது அதிகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை விமாசிப்பதிலேயே உள்ளார். இந்த அதாவுல்லா முஸ்லிம்களையும் தமிழர்களையும் காட்டிக் கொடுத்து விட்டார்.
எந்த சேவையும் அவர் செய்யவில்லை  அம்பறையில் இருந்த அக்கரைப்பற்றுக்கு 6. மணிக்குப் பிறகு பஸ் இல்லை.

அக்கரைப்பற்றைக்கூட பெரிதாக அபிவிருத்தி செய்யவில்லை. இவர் கிழக்கில் உள்ள அத்தனை முஸ்லிம் கிராமங்களையும் காட்டிக் கொடுத்து இந்த ஆட்சியில் அடிமைப்படுத்தி தானும். இன்னும் இரண்டொரு பேர்கள் வயிரை வளந்து கொண்டார்கள். உண்மையான தேசிய தலைவனாக இருந்தால் கட்சி யொன்ற வளர்ப்பதற்குறிய தகுதியிருந்தால் திருகோணமலை மாவட்டத்தில் அம்பாறையில், கல்முனையில் செய்த சேவைகள் என்ன?

ஆனால், ஒன்றை மட்டும் செய்துள்ளார். ஒட்டு மொத்த கிழக்கு மகாணத்தை ஈடுவைத்து அக்கரைப்பற்றில் இரண்டொரு கட்டடங்களை மாத்திரமே கட்டியிருக்கின்றார்" என்றார்.




You May Also Like

  Comments - 0

  • ACM Sunday, 26 August 2012 10:32 AM

    ஐயா , குருடன் யானையைப் பற்றி விபரித்த கதை எல்லோருக்கும் தெரியும் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .