2025 ஜூன் 28, சனிக்கிழமை

மறைந்த பொதுச் சுகாதார பரிசோதகர் பளீலின் பிள்ளைகளின் கல்விக்காக நிதியுதவி

Super User   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


பொதுச் சுகாதார பரிசோதகராக கடமையாற்றி மறைந்த கே.எம்.எம்.பளீலின் பிள்ளைகளின் கல்விக்காக நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் நடைபெற்றது.

இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் பொதுச் சங்கத்தின் உப தலைவர் எச்.ஏ.ஈ.டி.சுரவீர தலைமையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களிலிருந்து கிண்ணாவிற்கு வருகை தந்த குழுவினர் வந்து இந்த நிதியுதவியை நேரடியாக பிள்ளைகளிடம் கையளித்தனர்.

தம்பலகாமம் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பில் ஈடுபட்டிருந்த போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கே.எம்.எம்.பளீல் தாக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .