2025 ஜூன் 28, சனிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் பிழையான முடிவுகளே முஸ்லிம் சமூகத்தின் அவல நிலைக்கு காரணம்: அமைச்

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் பிழையான முடிவுகளே முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின்  தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில்  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும்  அப்துல் ரஸாக் மற்றும் டாக்டர் ஹில்மி மஹ்ரூப் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

"இன்று முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு பொய் பிரச்சாரங்கள் மூலம் இந்த அரசாங்கத்தினை விமர்சிக்கின்றனர்.

தற்போது நடைபெறுகின்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் கிழக்கில் அரசாங்கத்தினை கடுமையாக விமர்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வட மத்திய மாகாணத்தில் அரசாங்கத்தினை ஆதரித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு நிற்கின்றது.

இன்று பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றது என பிரச்சாரம் செய்து சகல இனங்களோடும் ஐக்கியமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்களை திசை திருப்பி  இனவாதத்தை பேசி பேரினவாத சக்திகளோடு முஸ்லிம்களை மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றார்கள்.

வடக்கிலே புலி பயங்கரவாதிகளால் 79 முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு  ஆயுதங்கிடங்குகளாக பாவிக்கப்பட்ட போது என்னவென்றும் பார்க்காத முஸ்லிம் காங்கிரஸிற்கு தேர்தல் காலங்களில் மாத்திரம் பள்ளிவாசல்கள் மீது அக்கறை ஏற்படுவது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு சமூகத்தை விற்று  அரசியல் செய்கின்ற நிலைக்கு இன்று முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இந்த விசமப்பிரச்சாரங்களுக்கு மக்கள் ஒரு போதும் செவிசாய்க்க கூடாது.

30 வருட காலமாக நாங்கள் அனுபவித்து வந்த துன்பங்களிலிருந்து இன்று எங்களுக்கு விடிவு கிடைத்துள்ளது. அபிவிருத்தி காணாதிருந்த எமது பிரதேசங்களில் இன்று அபிவித்தி மழை பொழிந்துக்கொண்டிருக்கிறது.

மக்கள் நிம்மதியாக நாடெங்கிலும் அச்சமின்றி பயணம் செய்கின்றனர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் இந்த பொய் பிரச்சாரங்களால். பெரும்பான்மை சமூகங்கள் எமது முஸ்லிம் சமூகத்தினை இனவாதிகளாக பார்க்கின்ற நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
மூவின மக்களும் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்கின்ற பிரதேசங்களில் இன்று ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்ணோடு பார்க்கின்ற அளவிற்கு முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட்டு இவ்வாறான பொய் பிரச்சாரங்களுக்கு செவிசாய்க்காமல் நாட்டில் மலந்துள்ள சமாதானத்தையும் எமது பிரதேசங்களில் நடைபெறுகின்ற நிலையான அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்" என கூறியதாக அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்தது.

இந்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • Mohamed Wednesday, 29 August 2012 05:11 PM

    இவரின் கூற்றுப்படி பள்ளிக்களை உடைப்பவர்கள், மூடும்படி சொல்லுபவர்கள் இனவாதிகள் அல்ல, உடைக்கிறார்கள் என்று சொன்னால் சொல்லுபவர் இனவாதி. அரசாங்கத்தில் இருந்தால் அவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டக்கூடாதோ? விமர்சிக்க கூடாது என ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லயே. அதற்கு தைரியம் இருப்பவன் தான் ஒருதலைவன். விமர்சிக்கவேன்டிய இடத்தில் விமர்சிக்கவேன்டும், புகழ வேன்டிய இடத்தில் புகழ வேன்டும். அதுதான் தலைமைத்துவம். வடமத்திய மாகானத்தில் வெற்றிக்குரிய வியூகம் அதுதான். அதுதான் ஆளுமை.

    Reply : 0       0

    mubharrakk Thagha Wednesday, 29 August 2012 06:04 PM

    நீங்கள் சரியான முடிவைத்தானே எடுத்துள்ளீர்கள், அப்படி இருக்க ஏன் இந்த அவல நிலை முஸ்லிம்களுக்கு?

    Reply : 0       0

    shan Wednesday, 29 August 2012 09:18 PM

    79 பள்ளிகள் உடைக்கப்பட்ட போது நீங்க எங்கங்கோ இருந்தேங்கோ??ஏன் பேச இல்லீங்கோ ,,ஆமா இப்ப ஒரு பள்ளியும் உடைக்கப்பட இல்லையாங்கோ??

    Reply : 0       0

    aroosh Thursday, 30 August 2012 03:07 AM

    ஹாஅ ஹா ஹாஅ சிரிப்ப கிடக்குது

    Reply : 0       0

    ACM Thursday, 30 August 2012 10:51 AM

    நீங்கள் நாட்டில (சிறி லங்காவில்) இருந்து கொண்டுதான் பேசுகின்றீா்களா ? அல்லது நாட்டுக்கு வெளியிலிருந்து கொண்டு பேசுகின்றீாகளா ? நீங்கள் ஹக்கீமை திட்டித் தீா்க்க வேண்டும் என்றால் நிறையவே திட்டித்தீருங்கள் (அதை அவரும் விரும்புவார் காரணம் அந்த மனிதனின் இயல்பு அது ) ஆனா முழுப் புசனிக் காயை சோற்றில் புதைப்பதுபோல சமூகத்தை மடயனாக்கி பேசாதீங்க ! நீங்க மட்டுமல்ல காங்கிரஸிலிருந்து விலகி நிற்கின்ற அனைவரும் ஹக்கீம் சரியில்லை என்றுதான் சொல்கின்றார்கள் அதனால்தான் பிரிந்து சென்றோம். என்ககிறீா்கள் பரவாயில்லை பிரிந்து சென்ற நீங்கள் அனைவரும் ஒன்றாகவாவது இருக்கின்றீா்களா இல்லையே !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .