2025 மே 12, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கியாஸ் ஒலுமுதீன்

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருகோணமலை, முள்ளிப்பொத்தானை பிரதேச 95ஆம் மைல் கல்லிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 
முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவரும் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்றபோது முச்சக்கரவண்டிச் சாரதி   முச்சக்கரவண்டியை விட்டு வெளியே பாய்ந்து எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X