2025 மே 12, திங்கட்கிழமை

மாற்றுத்திறனாளிகள் பொதுநிதியத்தின் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எஸ்.எச்.அமீர்


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் அமைக்கப்பட்ட புல்மோட்டை மாற்றுத்திறனாளிகளுக்கான பொது நிதியத்தின் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புல்மோட்டை பொது நூலகக் கேட்போர் கூடத்தில் குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எச்.எம்.சல்மான் பாரிஸ்,ஐ.பதுர்தீன், பொது நிதியத்தின் தலைவர் ஏ.சி.அப்துல் ஹாலித், பொருளாளர் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குச்சவெளிப் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக் ஒரு தொகை பணத்தினை நிதியத்திற்கு வழங்கிவைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X