2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பூங்கா நிர்மாணத்திற்கு அடிக்கல் நடல்

Super User   / 2013 ஜூலை 07 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ், அப்துல் பரீத்


கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் பூங்காவொன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

நகர சபைத் தலைவர் டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேயவிக்கிரம கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பொருளாதாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும வேலைத்திட்டத்தின் ஊடாக கிண்ணியா கட்டையாறு ஒரிகன் பாலன்களுக்கிடையில் இந்த பூங்கா நிர்மாணிக்கப்படவுள்ளது.இதற்காக ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .