2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிண்ணியா – தம்பலாகமம் வீதி விஸ்தரிப்பு ஆரம்பம்

Super User   / 2013 ஜூலை 10 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா – தம்பலாகமம் வீதி விஸ்தரிப்பு வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல கிழக்கு மாகாண முதலமைச்சா நஜிப் அப்துல் மஜீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மஹிந்த சிந்தனை தேசிய அபிவிருத்தி கருத்தாக்கத் திட்டத்தின் கீழ் கார்பெட் வீதியாக கிண்ணியா தம்பலாகமம் வீதி விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணத்திற்காக சவூதி அராபியா அரசாங்கம் 875 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

கிண்ணியா, தம்பலாகமம் மற்றும் முள்ளிப்பொத்தான பிரதேச மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இந்த வீதி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .