2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கணினிப் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 14 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கணினிப் பயிற்சிநெறியை பூர்த்திசெய்த விழிப்புலன்  அற்ற 30 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்;சித் திணைக்களத்தின் கணினிக் கூடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ந.மணிவண்ணன் இவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

'யாவருக்கும் கணினி' என்னும் அரசாங்கத்தின் இ-ஸ்ரீலங்கா கொள்கையின் இலக்கை அடையும் பொருட்டு கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களமானது மாகாணசபை ஊழியர்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான கணினிப் பயிற்சிகளை திட்டமிட்டு வழங்கி வருகின்றது.

15 நாட்களைக் கொண்;ட இப்பயிற்சிநெறியானது ஒவ்வொரு வாரமும் 5 நாட்களுக்கு நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .