2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினை உருவாக்க அங்கிகாரம்

Super User   / 2013 ஜூலை 16 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினை உருவாக்குவதற்கான அங்கிகாரத்தினை மாகாண அமைச்சரவை வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்பாசனம், வீடமைப்பும், நிர்மாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரைவ பத்திரத்திற்கே மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாண சபை அமைச்சரiவை கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
  • சம்மாந்துறை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரம் உயர்த்தல்
  • கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் விசேட நிதியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடம் கோரல்
  •  ஒய்வுபெற்ற விஞ்ஞான, கணித, ஆங்கில (சிங்கள மொழி மூலம்) ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளல்
  • கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நியதிச்சட்டத்தை திருத்தல்
  • குச்சவெளி பிரதேசத்தில் நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி வழங்குவதற்கான அனுமதி.
  • செரனீட் பீச் கபானா தனியார் நிறுவனத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் குச்சவெளியில் பிரதேசத்தில் காணி வழங்கல்.
  • கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமான பொறப்பொல குளத்திலிருந்து றம்புக்கன் ஓயா திட்டத்தின் ஊடாக 500 ஏக்கர் காணிகளுக்கு நீர் வழங்கல்.
  • கிழக்கு மாகாணசபையின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்தல்.
  • கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமாக உள்ள சாரதி நியமனங்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுத்தல்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .