2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு பிரஜைகள் இருவர் திருமலையில் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 16 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை புகையிர நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. பெரும்பான்மை இன மக்களின் கோரிக்கையை அடுத்தே இவர்கள் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை புகையிரத நிலையித்தில் பொலிவியா நாட்டைச் சேர்ந்த இளைஞனே தனது பெண் நண்பியுடன்; கொழும்பு செல்வதற்காக காத்திருந்துள்ளார்.

அவ்விருவரும் அணிந்திருந்த ரீ சேரட்;டில்  புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருந்துள்ளது.

இதனைக் கண்ட சக பிரயாணிகள் இவர்களிடம் சென்று அணிந்திருந்த ரீ சேர்ட்டினை கழற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மொழி புரியாத இந்த வெளிநாட்டவர்களால் இதனை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு குழுமியவர்கள் அவர்களின் செயற்பாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

சம்பவத்தையடுத்து  புகையிரத நிலைய காவல் துறை அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டதை தொடர்ந்து ரீ சேர்ட் கழற்றப்பட்டதுடன வெளிநாட்டவர்கள் இருவரும் விசாரணைக்காக  பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .