2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சீமெந்துப் பொதிகளும் கூரைத்தகரங்களும் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கிலுள்ள  கூனித்தீவு மற்றும் நவரெத்தினபுரம் கிராமங்களில்  மீளக்குடியேறிய மக்களுக்கு சீமெந்துப் பொதிகளும் கூரைத்தகரங்களும் நேற்று சனிக்கிழமை  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கூனித்தீவு பகுதியில் மீளக்குடியேறிய 89 குடும்பங்களுக்கும்  நவரெத்தினபுரம் பகுதியில் மீளக்குடியேறிய 137  குடும்பங்களுக்குமான சீமெந்துப் பொதிகளையும் கூரைத்தகரங்களையும் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் வழங்கிவைத்தார்.

இதன்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் 8 சீமெந்துப் பொதிகளும்  12 கூரைத்தகரங்களும் வழங்கப்பட்டன.

கூனித்திவு நாவலர் வித்தியாலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க  அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா, கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .