2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வீதி விளக்குகளுக்கான மின்விநியோகம்

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, வடக்கு புல்மோட்டை கிராமத்தில் பொறுத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளுக்கான மின்விநியோகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தின் நிதி உதவியில் பிரதேச சபையினால் இம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இம் மின்விளக்குகளுக்கான மின் விநியோகத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை, புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்விலும் பிரதி அமைச்சர் கலந்துகொண்டார்.

இவ்விரு நிகழ்வுகளிலும் குச்சவெளி பிரதேச சபையின் தலைவர் ஆ.முபாறக், பிரதி தலைவர் ஆதம்பாவா தௌபீக் மற்றும் உள்ளூர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .