2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வெடிபொருட்கள் கைப்பற்றல்

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை - புல்மோட்டை வீதியிலுள்ள வேலூர் என்னும் இடத்தில் இன்று திங்கட்கிழமை வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அநுராதபும் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்படும்போது கைப்பற்பபட்டதாக பொலிஸார் தெரிவத்தனர். இதன்போது 200 டைனமைட்டக்கள், 6.5 மீற்றர் வெட மருந்து நூல் என்பவையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

உப்புவெளி குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் எம். சவாகீர் தலைமையிலான குழுவினர் கடற்படையின் உதவியுடன்  இதனை கைப்பற்றியுள்ளர். இந்த முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இறக்கண்டி பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .