2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'றிஸானா நபீக் பவுண்டேஷன்' உதயம்

Super User   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட றிஸானா நபீக்கின் நினைவாக   'றிஸானா நபீக் பவுண்டேஷன்' எனும் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த பவுண்டேஸனின் அங்குரார்ப்பண வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை  மூதூரில் இடம்பெற்றது. எஸ்.எப்.எம். அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி முஹம்மது மஹ்ரூப் தலைமையில் மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் இவ்வைபவம் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் றிஸானா நபீக்கின் பெற்றார், உறவினர்களோடு றிஸானாவின் விடுதலைக்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த டாக்டர் கிபாயா, ஏஸியன் ரிபியூனல் இணையத்தின் பணிப்பாளர் ராஜ சிங்கம், மூதூர் பிரதேச தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் எம்.சி.எம்.செரீப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம். நூர்தீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது  றிஸானா நபீக் பவுண்டேஷன் உத்தியோகபூர்வ இணையத்தளமொன்றும் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதேவேளை, பணிப் பெண்களாக வெளிநாடு சென்று பாதிப்பிற்குள்ளானவர்களின் பிள்ளைகள் மூவருக்கு கல்வியைத் தொடர்வதற்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதோடு யுத்தத்தின் போது கணவனை இழந்த விதைவை ஒருவருக்கு வாழ்வாதாரத்திற்கான உதவியொன்றும் இதன்போது வழங்கப்பட்டது.

பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதற்கான காரணத்தை இல்லாமற் செய்வதற்கான முன்மாதிரியான திட்டங்களை செயற்படுத்துவதை முதன்மை  நோக்கமாகக் கொண்டு இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .