2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நான்கு பொலிஸ் பிரிவுகளில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த எட்டு மாத காலப் பகுதிக்குள் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா,சம்பூர் மூதூர் மற்றும் சீனக்குடா பொலிஸ் பிரிவுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில விஜேசேஹர தெரிவித்தார்.

கிண்ணியா, சம்பூர், சீனக்குடா மற்றும் மூதூர் ஆகிய பொலிஸ் பிரிவில் உள்ள கிராமிய சிவில் பாதுகாப்பு மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கிண்ணியா மத்திய கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த குற்றச்செயல்கள்  தொடர்பாக கடந்த வருடம் 773 வழக்குகள் பதிவாகி இருந்த அதேவேளை இந்த வருடம் கடந்த எட்டு மாத காலப் பகுதிக்குள் 862 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சீனக்குடா பொலிஸ் பிரிவில் கடந்த வருடம் 156 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இருந்து இந்த வருடம் 213 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

கிண்ணியா பொலிஸ் பிரிவில் கடந்த வருடம் 132 வழக்குகள் பதியப்பட்டிருந்தன  இந்த வருடம் 150 வழக்குகளாக அதிகரித்துள்ளது.சம்பூர் பொலிஸ் பிரிவில் கடந்த வருடம் 149 வழக்குகள் பதியப்பட்டிருந்தன இந்த வருடம் 217 வழக்குகளாக அதிகரித்துள்ளன.மூதூர் பொலிஸ் பிரிவில் கடந்த வருடம் 336 வழக்குகள் பதியப்பட்டிருந்தனஇந்த வருடம் 282 வழக்குகளாக குறைந்துள்ளன.

கஞ்சா ஹெரோயின்,கசிப்பு மற்றும் குடிபோதை ஆகிய குற்றச் செயலகளே இவ்வாறு பதியப்பட்டுள்ளன.

கிராமிய மட்டத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது எதிர்கால சந்ததியினருக்கு சவாலாகவே அமைந்துள்ளது.இதன் மூலம் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ்,பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகின்றது.எனவே இக் குழுக்களை உயிரோட்டமுள்ளதாக மாற்றுவது அதன் உறுப்பினர்களின் பொறுப்பாகும்.

கிராமிய மட்டத்தில் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை சரியாகவும் தகுந்த நேரத்திலும் மேற்கொள்வதன் மூலமே தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி தேசிய ரீதியிலான சமூக அபிவிருத்தியை உருவாக்க முடியும் .

வியாபார நோக்கோடு கிராமத்துக்குள் புது முகங்கள் ஊடுறுவி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம்.அதேபோல் கிராமங்களுக்குள் இரகசிய கூட்டங்களை நடத்தலாம். இந்த விடயங்களில் கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினர் அவதானமாக இருக்க வேண்டும்.
பொலிஸ் நிலையங்களையும் பொது மக்களையும் தொடர்பாடல் ரீதியாக இணைக்கின்ற ஒரு செயற்றிட்டமே சிவில் பாதுகாப்பு குழுக்களாகும் குற்றச் செயல்களில் இருந்து நமது கிராமங்களை நாம் பாதுகாக்கின்ற போது தேசியம் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .