2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ் ஷாபி


கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2013ஆம் ஆண்டுக்கான கிண்ணியா பிரதேசத்தின் பல்Nறு துறைசார்ந்த அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பல்வேறு தரப்பினரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் அபிவிருத்தி வேiலைகளில் காலதாமதம் ஏற்படுத்தும் ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் இதன்போது தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், "இந்த வருடம் நவீன வசதிகளுடன்கூடிய ஆயுர்வேத வைத்தியசாலை உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பட கிண்ணியாவில் தனது  நிதியின் மூலம் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .