2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஹரீஸ் சிறுவர் பூங்கா திறப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எச்.அமீர்


மூதூர் பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட  ஹரீஸ் சிறுவர் பூங்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட், திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், பிரதி தவிசாளர் எம்.எச்.ஹாஜா முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டதோடு புலமைப் பரிசில் பரீட்சையில் பிரதேசத்தில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .