2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பவள விழா நடை பவனி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார், 
ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்
 
திருகோணமலை -ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 75 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதனை முன்னிட்டு பவள விழா நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதனையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு நடை பவனி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 
 
இதில் கல்லூரியின் பழைய மாணவர்களான கிழக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன், நகராட்சி மன்ற தலைவர் க.செல்வராசா, வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் மற்றும் சங்கத்தின் போசகர்களான வைத்தியகலாநிதி கு.ஹேமசந்திரா, மா.இராசரெத்தினம் அடங்கலாக பல பழைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நகர வீதிகள் ஊடாக இவ் ஊர்வலம் நடத்தப்பட்டது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .