2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியாவில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஆறு பிரதேச சுகாதாரப் பரிசோதகப் பிரிவுகளிலும் கட்டக்காலி நாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி கருத்துத் தெரிவிக்கையில்,
பைஸல் நகர் மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய  இரண்டு சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலும் நூறு நாய்கள் கருத்தடை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக கிண்ணியா பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றது.

விசர்நாய் கடிக்கு ஆளாகுவோர் வீதம் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக எதிர்வரும் 30 ஆம் திகதி வரையும் இந்த கருத்தடை நிகழச்;சித் திட்டம் நடைபெற்று வரும் என்று தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .