2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் வீடுகள் கையளிப்பு

Super User   / 2013 நவம்பர் 01 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலை, கோமரங்கரவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புளிக்கண்டிக்குளம் கிராமத்தில் இருபது வறிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் அண்மையில் கையளிக்கப்பட்டன.

குறித்த பிரதேசத்தில் மீள்குடியேறி கஷ்டப்படும் வறிய குடும்பங்களுக்கே இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் வதிவிடங்களும் வாழ்வாதாரங்களும் யுத்தத்தினாலும் காட்டு விலங்குகளாலும் அழிக்கப்பட்டிருந்தன.

இந்த குடும்பங்களின் வேண்டுகொளை கவனத்தில் எடுத்த 'முஸ்லிம் எய்ட்' திருகோணமலை மாவட்ட செயலாளரின் ஆலோசனைகளுக்கு அமைய நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்படி வீட்டுத்திட்டமானது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 125 நிரந்தர வீடுகளை அமைக்கும் 'முஸ்லிம் எய்ட்' இன்  நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

இந்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டீ.டீ.கே. டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .