2025 ஜூன் 26, வியாழக்கிழமை

எரிபொருளில் கலப்படம்: படகுகள் துறைமுகத்திற்கு திரும்பின

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, சீனக்குடா மீன்பிடித்துறைமுகத்தில் இருந்த ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பல படகுகள் பழுதடைந்த நிலையில் மீண்டும் துறைமுகத்திற்கு திரும்பி உள்ளன. இதனால் படகுகளின் சொந்தக்கார்களுக்கு பல இலட்சம் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குளறுபடியே  இதற்கு காரணம் என மீனவர்களும். படகுகளின் உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

சீனக்குடா துறைமுக எரிபொருள் விநியோகிக்கும் இடத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட எரிபொருளில் கலப்படம் செய்யப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிகப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது விடயமாக  கடற்தொழில் திணக்கள அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 10 ம் திகதி தாங்கள் எரிபொருள் நிரப்பிக் கொண்டு கடலுக்கு சென்றதாகவும் வழயிலேயே படகளின் இயந்திரங்களில்  ஏற்பட்ட குழப்பம் காரணமாக  தொடரந்து கடலுக்குச் செல்ல முடியாது தாம் திரும்பியதாகவும் தெரிவித்தனர்.

சில படகுளின் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன இதற்கு எரிப்பொருளில் ஏதோவொன்று கலக்கப்பட்டிருப்பதாக திருத்துனர்கள் தெரிவித்ததாக படகுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .