2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண காணி பிரச்சினை தொடர்பில் விசேட மாநாடு

Super User   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா, வடிவேல் சக்திவேல்


கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட மாநாடொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பட்டிமேடு மேய்ச்சல் நிலம், விவசாயக் காணிகள், பொத்துவில் கரஞ்சோலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மங்களகம, ஏறாவூர் பற்று, வவுணதீவு, அம்பாறை - மட்டக்களப்பு எல்லைப் பிரதேசங்கள், திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, குச்சவெளி போன்ற பிரதேசங்களின் காணப்பட்டு வரும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் விசேடம் கவனம் செலுத்தப்பட்டது.

மூன்று மாவட்டங்கிளினதும் பிரதேச மற்றும் மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் காணி பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பொது இணக்கப்பாடடின் மூலமாக ஒரு தீர்வுக்கு வருமாறு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதன்போது ஆலோசனை வழங்கினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .