2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்படமாட்டாது: உபவேந்தர்

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


'கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் மூடப்படமாட்டாது. அண்மைக்காலமாக திருகோணமலை வளாகம் மூடப்படும் என்ற சந்தேகம் மக்கள்; மத்தியில் நிலவி வருகின்றது. தற்போது இவ்வளாகம் நன்கு அபிவிருத்தி கண்டு வருகின்றது' என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லுஸரி மாணவர்களின் பரிசளிப்பு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழகத்தின்  உபவேந்தர் கிட்ணன் கோபிந்தராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடரந்து உரையாற்றுகையில்,

'எமது ஒரே சொத்து கல்வி அகும். இதில் நாம் முன்னேற்றம் காணும்போது எம்மை நன்கு வளர்த்துக்கொள்ள முடியும். இடப்பெயர்வுகள் காரணமாக நாம் சொத்துக்களை இழந்த போதிலும் கல்விக் காரணமாக நாம் உன்னத நிலையினை அடைய முடியும்' என்று குறிப்பிட்டார்.

இதன்போது கல்லூரி சஞ்சிகையான 'உள்ளக்கமலம்' 5ஆவது இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .