2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பட்டதாரி நியமனத்தில் தமிழ் ஆசிரியர்கள் புறக்கணிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


 'கிழக்கு மாகாணத்தில் தற்போது வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் முற்றாக புறக்கனிக்கப்பட்டுள்ளன' என தமிழி தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை நகரசபை உறுப்பினரான சி.நந்தகுமார்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல தழிழ் பாடசாலைகளில் பல்வேறு பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றபோதும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாது புறக்கனிக்கப்படுவது கவலைக்குறியது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் பாடசாலைகளின பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட விபரங்களை வெளியிடத்தயாரா? என கேள்விக் கேட்க விளைகிறேன் அவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் தண்டாயுதபாணியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .