2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் - விற்பனையாளர்கள் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 28 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலை ஜேகப் ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்டாட்  மற்றும் செபோ தொண்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அக்டாட் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் கரன்ட் வோக்கர், ஈஸ்ட் லங்கா வர்த்தக சம்மேளன பிரதிநிதி ராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், 80 பேருக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களும் இந்தச் சந்திப்பில் பங்குபற்றினர்.

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூக உந்துதல் அபிவிருத்தித் திட்டம் மற்றும்   வறியோர் ஆதரவு பொருளாதார அபிவிருத்தி என்னும் இந்தத் திட்டம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலக பிரிவுகளில்  40 பயனாளிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வாய்ப்பாக இன்றைய சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக இந்தச் சந்திப்பில் பங்குபற்றியவர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .