2025 ஜூன் 26, வியாழக்கிழமை

படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

மீன்பிடித் தொழிலுக்காக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 04 மணியளவில் சென்ற மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பத்தாம் குறிச்சியை  சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான ஜெஸ்டின் (வயது 37) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

இவர் வழமை போன்று தனது மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றபோது, கடல் அலை அதிகமாக காணப்பட்ட நிலையில் இந்த மீனவரின் படகு கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .