2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாகாண அபிவிருத்தி அரங்கத்தின் ஊடாக அபிவிருத்தி: கிழக்கு முதலமைச்சர்

Super User   / 2013 டிசெம்பர் 10 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


"கிழக்கு மாகாண அபிவிருத்தியினூடாக மக்கள் நலன் என்ற செயல்முறையில் முக்கிய அபிவிருத்தி பங்குதாரர்களான நாம் அனைவரும் இணைந்து கருமமாற்ற வேண்டியுள்ளது. அதற்கான வழிமுறைகளில் ஒன்றாகவே மாகாண அபிவிருத்தி அரங்கம் அமைகிறது" என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம் செவ்வாய்க்கிழமை பிரதம செயலாளர டி.எம்.சரத் அபயகுணவர்த்தன தலைமையில் திருகோணமலையில் அமைந்துள்ள வரோதய நகர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"நல்லாட்சியும் அபிவிருத்தியும் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு எமது மாகாண சபையில் முதன்முறையாக 'மாகாண அபிவிருத்தி அரங்கம்'; என்ற தொடர் கருத்தரங்கினை இவ்வருடத்தில் நாம் ஆரம்பித்தத்துடன் மாவட்ட மட்டத்திலான அரங்கத்தினை மூன்று மாவட்டங்களிலும் ஆக்கபூர்வமான முறையில் நடாத்தியிருந்தோம்.

இன்று இந்த அபிவிருத்தி அரங்கத்தின் மாகாண மட்டத்தில் நடாத்துவதற்கு நாம் அனைவரும் இங்கு ஓன்றுகூடியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளான அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் எமது கொள்கை தீர்மானங்களிற்கு செயலுருவம் கொடுக்கும் மாகாண சபையினது சகல சிரேஸ்ட உத்தியோகத்தர்களும் ஓரு சிறந்த நோக்கத்தோடு இங்கு கூடியிருப்பது அரிய சந்தர்ப்பம் என்றே நான் கருதுகின்றேன்.

கிராம மட்டத்திலிருந்து கருத்திட்டங்களை உள்வாங்கி பொருத்தமான துறைசார் திட்டங்களை உருவமைப்பதற்கும் ஒரு காத்திரமான பயனுறுதிமிக்க வருடாந்த மாகாண அபிவிருத்தித் திட்டத்தினை தயாரிப்பதற்கும் மக்களின் தேவைகள் அபிலாசைகளை முன்னுரிமைப்படுத்த வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளான எமக்கு உள்ளது.

அதேபோன்று கிடைக்கதக்க வளங்களுடன் பயன்மிக்க நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்து வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு எமது உத்தியோகத்தர்களுக்கும் உண்டு.  கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டமையை இங்கு ஞாபகப்படுத்துகின்ற அதேவேளை இன்று மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதிப்படுத்தும் அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் பங்குகொள்கின்ற சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த அபிவிருத்தி அரங்கத்தினை நடப்பாண்டு நிகழ்ச்சிதிட்டம் பற்றிய ஒரு முன்னேற்ற மீளாய்வு கூட்டமாகவோ அல்லது குறைகளை விவாதிக்கின்ற களமாகவோ பயன்படுத்திக் கொள்ளமல்  மாகாண அபிவிருத்திக்கான பொதுக்கொள்கை, உபாயங்கள், வழிமுறைகள் மற்றும் முன்னுரிமை தேவைகள்  சார்ந்த விடயங்களை கலந்துரையாடி பயன்தரும் கருத்துக்களை முன்வைக்;;குமாறு மாகாண அமைச்சர்களையும் உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறே செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் யாவரும் இந்த அரங்கத்தில் தங்களது பெறுமதியான கருத்துக்களை முன்வைத்து காத்திரமான பங்களிப்பினை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பாக பயனுறுதிமிக்கதும் சிறந்த பெறுபேறுகளைத் தரக்கூடியதுமான துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அமுலாக்கப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

அப்போதே அவை மாகாணத்தின் நீண்ட கால அபிவிருத்தி கட்டமைப்புடன் இணைந்து இருக்க வேண்டும். மாகாணத்தின் சமூக பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ள முடியும். அபிவிருத்திக்கென எமக்கு கிடைக்கப் பெறுகின்ற நிதி வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். மேலும் நிதி வளங்களை திரட்டுவதில் தொடர்ந்தும் முயற்சி செய்வதுடன் அதற்கான வழிவகைகளை தேடுவதில் நாம் யாவரும்  கரிசனையுடையவர்களாக இருக்க வேண்டும்.

அத்துடன் கிடைக்கின்ற நிதிகளை மக்களின் முன்னுரிமை அடிப்டையில் தேவைகளில் சிறப்பாக பயன்படுத்துவதிலும் நாம் வெற்றிகாண்பதோடு சகல துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பினை மேலும் பயனுறுதிமிக்க வகையில் வலுவாக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட ஒருங்கிணைந்த மாகாண அபிவிருத்தி நிகழ்ச்சிதிட்டம் என்ற வகையில் மாகாண சபை நிகழ்ச்சித்திட்டங்களுடன் வெளிநாட்டு நிதியளிப்புடனான கருத்திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு துறைசார் இலக்குகள் அடையப்படுவதில் தெளிவான அணுகுமுறை கையாளப்பட வேண்டும்.
இங்கு நான் கூறிய விடயங்களில் உங்கள் அனைவரினதும் காத்திரமான பங்களிப்பு தேவை என்பதை வலியுறுத்திக் கூறவிரும்புகிறேன்.

மேலும் அபிவிருத்தியை முன்னுரிமைப் படுத்தல், அமுலாக்கல் மற்றும் ஒருங்கிணைத்தல் கண்காணித்தல் என்பவற்றில் நாம் அனைவரும் சேர்ந்து செயற்படுகின்ற ஒரு பொறிமுறையை உருவாக்குதல் பொருத்தமானது என கருதுகிறேன்" என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .