2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Super User   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கிண்ணியா பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் நான்கு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச சபையின் அமர்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம்; தவிசாளர் எஸ்.எல்.எம் ஜவாதுல்லாஹ்வினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து வரவு-செலவுத் திட்டம் நான்கு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஐந்து பேரும் எதிராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர்.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம், ஐந்து மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:

கிண்ணியா பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டமும் தோல்வி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .