2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குச்சவெளியில் வெடி விபத்து: சிறுவன் பலி; இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 27 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், எஸ்.சசிக்குமார்

திருகோணமலை,செந்தூர் பகுதியில் வெடி பொருள் ஒன்று வெடித்ததில்  சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்கள்.

இச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரும் காய மடைந்தவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இச் சம்பவத்தில் 6 வயது சிறுவன் றினோஸ் காயமடைந்து திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பயனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளார்.

இத்துடன் அவரின் சகோதரர்களான 10 வயது றிமாஸ் 03 வயது றினோஸா ஆகியோர் இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், தங்கள் வீட்டு வளவில் கிடந்த மர்ம பொருளொன்றை எடுத்து ஆணியை அறைய முற்பட்ட போது குறிந்த அந்த பொருள் வெடித்ததாக தெரிக்கப்படுகின்றது.

 இவை தொடர்பாக குச்சவெளிப் பொலிசார் விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .