2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு

Super User   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

சர்வதேச விசேட தேவையுடையோர் மற்றும் சர்வதேச சிரேஷ்;ட பிரஜைகள் ஆகிய தினங்களை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின்  நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு திருகோணமலை, அலஸ்தோட்டம் - மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினத்திற்காக முதுமையை எதிர்கொள்வதற்கு வாழ்நாள் முழுவதும் தயாராகுதல் மற்றும் விசேட தேவையுடையோர் தினத்திற்காக அனைவரையும் சமூகத்துடன் இணைப்பதற்காக தடைகளை நீக்கி கதவுகளை திறத்தல் ஆகிய கருப்பொருள்களில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 பிரதேச செயலகங்களிலும் உள்ள சிறந்த விசேட திறமையுடையோர் மற்றும் சிறந்த சிரேஷ்ட பிரஜைகள் தெரிவுசெய்யப்பட்டு இதன்போது கௌரவிக்கப்பட்வுள்ளனர்.

அத்துடன் ஏற்கனவே இந்த நிகழ்வை முன்னிட்டு இடம்பெற்ற கட்டுரை, ஓவியம், விளையாட்டுப் போட்டி மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .