2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: கடற்படை வீரருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, திரியாய் பகுதியில் 4 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும்  கடற்படை வீரரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் தி.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

திரியாய் 5ஆம் வட்டாரத்தில் வசிக்கும் சிறுமியொருவரை கடந்த ஞாயிற்றக்கிழமை (29) வல்லுறவுக்கு உட்படுத்தியதாக மேற்படி கடற்படை வீரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில்,  மேற்படி கடற்படை வீரரை கைதுசெய்த பொலிஸார் அந்நபரை திங்கட்கிழமை (30) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இந்நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .