2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கையடக்கத் தொலைபேசிக்கடையில் திருட்டு; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 02 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூரிலுள்ள கையடக்கத் தொலைபேசி கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை நேற்று புதன்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தோப்பூர் பிரதான வீதியிலுள்ள மேற்படி கையடக்கத் தொலைபேசிக் கடை  உடைக்கப்பட்டு, கடையிலிருந்து 100,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் கடந்த 02 வாரங்களுக்கு முன்னர் திருட்டுப் போயுள்ளன.

தனது கடையிலிருந்து  காணாமல் போன கையடக்கத் தொலைபேசிகளின் இரகசிய குறியீட்டு இலக்கங்களை தோப்பூர் பிரதேசத்திலுள்ள சகல கையடக்கத் தொலைபேசிக் கடைகளுக்கும் திருட்டு இடம்பெற்ற கடையின்  உரிமையாளர் கொடுத்து, இந்த இரகசிய குறியீட்டு இலக்கங்களுடன் கையடக்கத் தொலைபேசிகளை யாராவது விற்பனை செய்வதற்கோ அல்து திருத்துவதற்கோ கொண்டு வந்தால் தனக்கு அறிவிக்குமாறு  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று புதன்கிழமை மற்றுமொரு கையடக்கத் தொலைபேசிக் கடையொன்றுக்கு கையடக்கத் தொலைபேசி ஒன்றை விற்பனை செய்வதற்கு இளைஞர் ஒருவர் சென்றார். இது தொடர்பில் சந்தேகமடைந்த கடை உரிமையாளர், இரகசிய குறியீட்டு இலக்கத்தை பார்த்தபோது திருட்டு இடம்பெற்ற கடை  உரிமையாளரின் கையடக்கத் தொலைபேசி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து  திருட்டு இடம்பெற்ற கடையின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தோப்பூர் பொலிஸில் திருட்டு இடம்பெற்ற கடையின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபரை தோப்பூர் பொலிஸார் கைதுசெய்து மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .