2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காணாமல் போனவர்கள் சம்பந்தமான முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 03 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூதூர் பிரதேசத்திலிருந்து  காணாமல் போனவர்கள் சம்பந்தமாக  90 முறைப்பாடுகள்   மூதூர் பீஸ் ஹோம் அமைப்புக்கு கிடைத்துள்ள நிலையில், அந்த முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம்  கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், மூதூர் பீஸ் ஹோம் அமைப்பு நேற்று வியாழக்கிழமை இந்த முறைப்பாடுகளை கையளித்துள்ளது.

காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட  ஜனாதிபதி  ஆணைக்குழுவின்    அனுமதியோடு,    மூதூர் பீஸ்ஹோம் அமைப்பானது காணாமல் போனவர்கள் சம்பந்தமான முறைப்பாடுகளை சேகரிக்கும் பணியில் கடந்த இரு வாரங்களாக ஈடுபட்டிருந்தது.

மூதூர் பிரதேசத்திலிருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர் ஆணைக்குழுவிற்கு  முறைப்பாடுகளை செய்வதற்கு ஆர்வம் காட்டாத நிலையிலேயே,  பீஸ் ஹோம் அமைப்பானது பொதுமக்களுக்கு அது சம்பந்தமாக தெளிவூட்டி முறைப்பாடுகளை சேகரிப்பதில் ஈடுபட்டு வந்திருந்தது.   



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .