2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மூதூர் அல்-மினா மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 ஜனவரி 06 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


திருகோணமாலை, மூதூர் அல்-மினா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுவரும் வளப்பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி அப்பாடசாலையின் மாணவர்களும் மாணவர்களின் பெற்றோரும் இணைந்து பாடசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை,  பாடசாலைக்கு விஜயம் செய்த மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி பாடசாலையில் நிலவும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வைப்பெற்றுத்தருவதாக   வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் முடிவிற்கு வந்தது.

1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பாடசாலையானது மிகப்பழமையான  கட்டிடங்களோடே இன்றுவரை இயங்கி வருகின்றது. இங்கு 16 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் 11 பழமையான வகுப்பறைகளே காணப்படுகின்றன.

தளபாடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பௌதீக வளப்பற்றாக்குறையினாலும் கல்வி, கல்விசாரா ஆளணி வளப்பற்றாக்குறையினாலும் பாதிக்கப்பட்டுள்ள  இப்பாடசாலை கல்விப் பெறுபேறுகளில் முன்னேறிவருவது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .