2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நாகப்பட்டினம் மீனவர்கள் வீடுசெல்ல மறுப்பு: உண்ணாவிரதத்திற்கு முஸ்தீபு

Kanagaraj   / 2014 ஜனவரி 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எஸ். சசிகுமார், ஏ.எம்.ஏ.பரீத்


முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 111 இந்திய மீனவர்களும் நாடுதிரும்புவதற்கு மறுத்துவிட்டனர்.

தங்களுடைய படகுகளை கொடுக்கும் வரையிலும் நாடுதிரும்ப போவதில்லை என்றும் அதற்கு உரிய பதில் கிடைக்காவிடின் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மீனவர்கள் பகல் மட்டுமே சாப்பிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், தாம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் எச்சரித்ததாக தெரிவித்தனர்.

தமிழகம், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 111 மீனவர்களும் கடந்த டிசெம்பர் 11ஆம் திகதி 15 படகுகளில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் த.சரவணராஜா அவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .