2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'தகைமைகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை'

Super User   / 2014 ஜனவரி 21 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


தகைமைகளின் அடிப்படையில் கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை என மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிற்கு பாதிக்கப்பட்டவர்கள் முறையீட்டுள்ளனர்.

இது தொடர்பாக பட்டதாரி ஆசிரியர் நியமன நேர்முக பரீட்சையில் தோற்றிய 27 பேர் கையொப்பமிட்டு நேற்று இந்த கடித்தினை மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிற்கு அனுப்பியுள்ளர்.

இதன் பிரதிகள் ஜனாதிபதி செயலகம், மாகாண ஆளுநர், முதலமைச்சர், மாகாண பொதுச் சேவைகள் ஆணையாளர் மற்றும் திருகோணமலையிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுலகம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக கடந்த 2013.12.11ஆம் திகதி தினகரன் பத்திரிகையின் பிரகாரம் நாங்கள் விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு 2013.12.23ஆம் திகதி தோற்றினோம்.

பின்னர் அதற்கான நியமனம் 2014.01.15ஆம் திகதி நியமனம் வழங்கப்பட்டது. இதன்படி வழங்கப்பட்ட நியமனமானது பத்திரிகையில் கேட்டுக்கொண்ட தகைமைகளின் அடிப்படையில் வழங்கப்படவில்லை.

மாறாக குறைவான மற்றும் எங்களைக் போன்று அதே தகமைகளைக் கொண்ட பட்டதாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கேட்டுக்கொண்ட நான்கு வகையான தகைமைகளின் அடிப்படையில் முதலாம் வகையான தகைமைகளைக் கொண்ட மாணவர்களுக்கும் இந்நியமனம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக பரிசீலனை செய்து சிறந்த தீர்வினை பெற்றுத் தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.  அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 44 பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்திற்காக வழங்கப்பட்ட நியமனத்தில் 02 பட்டதாரிகள் மாத்திரமே பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்ட முதலாவது தெரிவு செய்யும் தகமைகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .