2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சுற்றாடல் கொள்கையை வகுக்க தீர்மானம்

Super User   / 2014 ஜனவரி 26 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.வை.அமீர், ஏ.எஸ்.எம்.முஜாஹித்


கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் செயற்திறனை வலுப்படுத்தல் மற்றும் மாகாண சுற்றாடல் கொள்கையொன்றை வகுப்பதற்கான பூர்வாங்க திட்டம் ஆகியவற்றிற்கு ஆசிய மன்றம் நிதி அனுசரணை வழங்கியுள்ளது என மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜீதின் வேண்டுகோளுக்கிணங்க முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்திற்கு முதற் கட்டமாக 2, 050,000 ரூபாவினை ஆசிய மன்றம் ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜீத் மற்றும் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரின் முன்னிலையில் முதலமைச்சரின் செயலாளரும் மாகாண உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ் இந்த ஒப்பந்தத்தில் அண்மையில் கைச்சாத்திட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் அரச மற்றும் தனியார் துறை பங்காண்மையினை விருத்தி செய்வதல், கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னோடியான தகவல்கள் அடங்கிய 'செங்கோல்' பத்திரிகையினை வெளியிடுதல், துணை விதிகளை அச்சிடுதல், முத்திரை வரியினை உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறையினை இலகுபடுத்துதல், மாவட்ட மட்ட மீளாய்வுக் கூட்டடங்களை நடத்துதல் உள்ளிட்ட முக்கிய  செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என வலீத் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திற்கு என தனியான சுற்றாடல் கொள்கை ஒன்றினை வகுக்கும் செயற் திட்டத்திற்கு கிழக்கு மற்றும்  தென் கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களின் தொழில்நுட்ப ரீதியான உதவிகளும் பெறப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

இவற்றிற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண பேரவை செயலகம் ஒன்றினை அமைப்பதற்கான வரைபடங்களுடன் கூடிய செயற்திட்ட அறிக்கையினை தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .