2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருகோணமலை பொது வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டுவரல்

Super User   / 2014 ஜனவரி 26 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்

திருகோணமலை பொது வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் ஜனவரி 13ஆம் திகதி முதல் கொண்டுவரப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் வைத்திய  அத்தியட்சகர் எச்.கே.எம்.எம்.பி.கவிசேகர தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் காணப்பட்ட திருகோணமலை பொது வைத்தியசாலை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் தற்போது உள்ளவாங்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு கிடைத்துள்ள எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் ஆகியன இணைந்து மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளினாலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்த ஒரேயோரு பொது வைத்தியசாலை இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .