2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வரவு–செலவுத்திட்ட தோல்வி; த.தே.கூ உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஜனவரி 27 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

இலங்கை தமிழரசு கட்சியின் அதிகாரத்தின் கீழுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோற்கடித்த அக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

மேற்படி உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை செய்வதற்கு இரு குழுக்களை நியமித்துக்க மத்திய செயற்குழு, தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக அரசின் மெத்தனப் போக்கிற்கிற்கு எதிராகவும் வடமாகாண சபையின் ஆளுகை தொடர்பாகவும் மேலும் இரு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகரசபையின் கேட்போர் கூடத்தில் காலை 10 மணிமுதல் இரவு 7.30 மணிவரை இடம்பெற்றது. இலங்கை தழிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்மந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த செயற்குழு கூட்டத்தின் போது முக்கிய மூன்று தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

இந்த செயற்குழுக் கூட்டத்தின் போது உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகையில், 'யுத்தம் முடிவடைந்த நிலையிலும் வடக்கிலும் கிழக்கிலும் வலி.வடக்கு மற்றும் சம்பூரைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியேற்றப்படாமல் உள்ளனர். இவர்களை குடியேற்றுவதாக நாடாளுமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் அரசாங்கத்தினால் பலமுறை தெரிவிக்கப்பட்ட போதிலும் அது நிறைவேற்றப்படாமல் உள்ளது. அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள், கோயில்கள், வீடுகள் என்பன இடித்து அழிக்கப்பட்டு இராணுவ ஆக்கரமிப்புக்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன' என்றார்.

மேலும், 'இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள், தீர்வுகள் தொடர்பாக மெத்தனப் போக்கில் செயற்பட்டு வருகின்றது. வட, கிழக்கில் உள்ள மக்களின் இனப்பரம்பலை மாற்றி தமிழ் மக்களில் பூர்வீக பகுதிகளை பெரும்பான்மையின பிரதேசமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் செயற்பாடுகள் தொடர்பாக இந்த செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்றார்.

'காணாமல் போன பல்லாயிரக்கணக்கான மக்களின் தற்போதைய உண்மை நிலை,
தமிழர் பகுதிகளில் அதிகமான இராணுவப் பிரசன்னம், இதனால் மக்களின் வாழ்வாதாரம், சுதந்திரமான நடமாட்டம், பெண்களின் பாதுகாப்பு, சுயமரியாதை போன்றவற்றிற்கு அசௌகரிகமாக உள்ளமை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீரப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்' என்று சம்பந்தன் வலியுறுத்தினார்.

'யுத்தத்தின் இறுதிக் கட்டடத்தில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அரசு எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினை அமைத்து தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வினைத் தரும் நடவடிக்கையில் கூட இந்த அரசாங்கம் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் செயற்படவில்லை' என்றார்.

'வடமாகாண சபை தேர்தல் நிறைவடைந்து நான்கு மாதங்களாகியும் இங்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து அங்கு சீரான ஆட்சியை நடத்துவதற்கு பல தடைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் விதிக்கப்படுகிறது. எனவே அதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. வட மாகாணசபையை முறையாக நடாத்துவது இந்த அரசாங்கத்தின் நோக்கமல்ல என்பது.

இவ்வாறான விடயங்களை எமது கட்சி பொதுமக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அவ்வாறான விடயங்களில் விழிப்புடன் செயற்படுமாறு பிரசாரங்களை மேற்கொள்வதெனவும் தீர்மானித்தள்ளோம்' எனவும் இரா. சம்மந்தன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 'தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக' அக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை ண்சுனாதிராஜா தெரிவித்தார்.

'2014ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சிமன்ற வரவு – செலவும் திட்டத்தை தேற்கடித்த தழிழ் தேசிய கூட்மைப்பு அதிகாரத்தில் உள்ள சபைகளின் உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன' என்றும் அவர் குறிப்பிட்டார். 

'இக்குழுக்களின் வட மாகாணத்திற்கான குழுவின் இணைப்பாளராக வடமாகாண சபை உறுப்பினர் அரியரத்தினமும் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் கௌரிகாந்தன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பனரும் மத்திய குழு உறுப்பினருமான அற்புதராஜா ஆகியோருக்கு எதிராகவும் சில குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

அவர்கள் தொடர்பிலும் விசாரணை செய்வதற்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வலியுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .