2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கட்டுவலை முறைமையை பயன்படுத்துவதற்கு தடை: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார், சிங்காரவேலு சசிக்குமார், ஏ.எம்.பரீத்


கட்டுவலை முறையினை பயன்படுத்தி கொக்குளாய் களப்பு கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசின் நீர்வள துறையினர் கடந்த 3 மாதகாலமாக தடை விதித்தமையை கண்டித்து திருகோணமலை, புல்மோட்டை களப்பு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை (29) நண்பகல் ஈடுபட்டனர்.

புல்மோட்டையில் உள்ள திருமலை சந்தியில் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'ஜீவனோபாயத்தை கொண்டு நடத்தும் கட்டுவலை தொழிலை பெற்று தரவேண்டும். அவ்வாறு தடைசெய்யப்பட்ட தொழிலாயின் மாற்று தொழிலுக்கான நடவடிக்கையை உரிய அமைச்சும் திணைக்களமும் மேற்கொள்ளவேண்டும். புல்மோட்டை மீனவர்களுக்கு மாத்திரம் மீன்பிடி திணைக்களம் சட்டத்தை அமுல் படுத்தகூடாது' என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இதன்போது தெரிவித்தனர். 

இது தொடர்பில் புல்மோட்டை சிறுகடல் தொழிலாளர் அபிவிருத்தி மத்திய கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இஸ்மாயில் சய்புதீன் கருத்து தெரிவிக்கும் போது

'இவ்வாறான தடை உத்தரவு சட்டங்கள் ஏழை மீனவர்கள் மத்தியிலேயே பிரயோகிக்கப்படுகின்றன. இதனால், மீனவர்கள் அடிக்கடி கைதுசெய்யப்படுவதுடன் அவர்களுடைய உடமைகள் அரச உடமைகளாக்கப்படுகின்றன. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வரும் இத்தொழல் முறைமைக்கு தற்போது தடைவிதிப்பது திட்டமிட்ட சதி' என தெரிவித்தார்.

'இவ்வாறான தடை உத்தரவு தொடருமானால் மீனவர்களின் குடும்பங்களில் பட்டினிச் சாவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அத்துடன் வருமானம் இல்லாததால் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாதுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

சுமார் 300 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் இவ் ஆர்;ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .