2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கடற் குண்டு மீட்பு

Super User   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

திருகோணமலை, கும்புறுப்புட்டி சுற்றிலா ஹேட்டலுக்கு அருகிலுள்ள கடலில் கடற் குண்டொன்று நேற்று செவ்வாய்க்கிழமை பகல் மீட்கப்பட்டுள்ளது என திருகோணமலை கடற் படையினர் தெரிவித்தனர்.

கடற் கரையில் ஓதுங்கிய நிலையில் குண்டொன்று இருப்பாதாக நேற்று செவ்வாய்க்கிழமை கடற் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற கடற் படையினர் மூன்றரை அடி நீளமான 30 கிலோ கிராம் நிறையுடை கடல் குண்டை மீட்டுள்ளனர்.

இக்குண்டு இலங்கை கடற் படையினர் பயன்படுத்தாத குண்டு எனவும் இது வெளிநாட்டு கடற் படையினர் பயன்படுத்தும் குண்டு எனவும் கடற் படையினர் தெரிவித்துள்ளதுடன் மீட்கப்பட்ட குண்டை சலப்பையாறு கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .