2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருமலை சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு அன்பளிப்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்


திருகோணமலை மாவட்டத்தில் இயங்கும் 13 சிறுவர் மற்றும் சிறுமியர் இல்லங்களைச் சேர்ந்த 355 பிள்ளைகளுக்கு நேற்று திருகோணமலை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் (வை.எம்.சி.ஏ) அன்பளிப்பு பொதிகள் வழங்கப்பட்டன.

அவுஸ்திரேலிய நாட்டில் உள்ள கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்த சிலர் இணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த அன்பளிப்பு பொதிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
அன்பளிப்பு பொதிகள் சங்கத்தின் தலைவர் ப.டே.தம்பிப்பிள்ளை மற்றும் இயக்குநர் சபை உறுப்பினர்களால் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த 6 வருடங்களாக இவ்வாறான அன்பளிப்பு பொதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து பெறப்பட்டு வருடாந்தம் சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு வழங்கி வைக்கப்படுகின்றன என சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோ.அ.பிரபு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .