2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பெண்களுக்கான அரபிக் கல்லூரி திறப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா, மாஞ்சோலை பகுதியில் பெண்களுக்கான அரபிக் கல்லூரியொன்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை திறந்து வைக்கப்பட்டது.

கிண்ணியா எம்.பைஸால் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.இம்ரான் மஹ்ரூப் மற்றும் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கலந்து கொண்டு  திறந்து வைத்தனர்.

இப்பிரதேசத்தில் பெண்களுக்கான மதரஸா ஒன்று இல்லாதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது இம்மதரஸா திறந்து வைப்பதனால் பெண்கள் மார்க்கக் கல்வி பெற்றுக் கொள்வதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது' என பொதுமக்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .