2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியாவில் தோன்றிய அரியவகை உயிரினங்கள் கரைந்துள்ளன

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியாவின் அரை ஏக்கர் பிரதேசத்திலுள்ள வாவியொன்றிலிருந்து திடீரென அதிகளவில் திரண்டுவந்த  பாம்பு போன்ற அரியவகையான உயிரினங்கள்  தற்போது துண்டு துண்டாக உடைந்து கரைந்து போயுள்ளதாக புவியியல் பாடத்தில் சிறப்புப் பட்டம் மற்றும் முதுமாணிப் பட்டம் பெற்ற கிண்ணியா வலயக் கல்வி அலுவலக ஆசிரிய வள நிலைய முகாமையாளர் ஏ.டபிள்யூ.முஜீப்  தெரிவித்தார்.

இவை பாம்புகள் அல்ல. ஒரு வகையான  அரிய உயிரினங்களாகும். நீருள்ள  நிலத்தில் வாழும் இந்த உயிரினங்களால்; நீரில்லா நிலத்தில் வாழமுடியாது. நீரில்லா நிலத்திற்கு வந்தால் இந்த உயிரினங்கள் கரைந்துவிடும்.  இந்நிலையில், வெளியில் வந்த இந்த உயிரினங்கள் தற்போது கரைந்துபோயுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாரி காலத்தில்; மாத்திரம் கடலுடன் கலக்கும் வாவிகளானது, ஏனைய காலங்களில் நிரந்தரமாக கடலிலிருந்து பிரிந்திருக்கும். சவர் நீரையும் உவர் நீரையும்  கொண்ட இவ்வாறான வாவிகளில் இவ்வாறான உயிரினங்கள் வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார். 

நீர் நிலைகளில் வெப்ப நிலை அதிகரிக்கின்றபோது, இவ்வாறான வாவிகளிலிருந்து இவ்வாறான உயிரினங்கள் வெளிவருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இவ்வாறு அரியவகையான மேற்படி உயிரினங்கள் திரண்டு வந்ததால், இயற்கை அனர்த்தம் நிகழ்வதற்கு அறிகுறியாக  இருக்கலாமென்று  பிரதேசவாசிகள் அஞ்சுகின்றனர்.

கடந்த சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கிண்ணியாவின் கட்டையாறு பிரதேச ஆற்றில் இவ்வகையான உயிரினங்கள்; திரண்டு வந்ததை பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.  இதேகாலப் பகுதியில் மட்டக்களப்பு, செங்கலடி பாலத்திலும் இவ்வகை உயிரினங்கள் திரண்டிருந்தன.

மேலும்,  2011ஆம் 2012ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் பெரு வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னரும் கிண்ணியாவின் கட்டையாறு ஆற்றில் இவ்வகை உயிரினங்கள் வந்ததை பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது மீன் இனத்தைச் சார்ந்தவை அல்ல. இது ஒரு வகையான புழு ஆகுமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .