2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார், பஹ்மி யூஸூப்


திருகோணமலை - புல்மோட்டை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியதுடன் மேலும் இரு இராணுவ வீரர்கள் படுகாயங்களுக்குள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு சுற்றுலா வந்த பேருந்தொன்று முச்சக்கர வண்டி மீது மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முச்சகர வண்டியில் பயணம் செய்த இராணுவ வீரர்கள் மூவரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டநிலையில், வரும் வழியிலேயே ஒருவர் மரணமாகி உள்ளார். ஏனைய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

முச்சக்கரவண்டி சாரதி காயங்களின்றி தப்பித்துக் கொண்ட நிலையில், உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .